நேபாள பெருவெள்ளத்தில் மாயமான குடும்பம்: தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கும் சகோதரர்
Brother of British person missing in Nepal waiting by phone for updates: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நபர் ஒருவரின் சகோதரர், அவரைக் குறித்து ஏதாவது தகவல் கிடைக்காதா என தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கிறார்.
நேபாளப் பெருவெள்ளம் 1,240 உயிர்களை பலிகொண்டுவிட்ட நிலையில், இன்னமும் ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை.
அப்படி என்ன ஆனார்கள் என்றே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களில் பிரித்தானியர்களும் அடங்குவர்.
தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கும் சகோதரர்
கடந்த வாரம், சந்தோஷ் சாஹு, அவரது மனைவியான சுரபி பதி, தம்பதியரின் பிள்ளைகளான ஸ்பாண்டன் மற்றும் சாய்னா குமாரி ஆகியோர் பிரித்தானியாவிலிருந்து கைலாச மலைக்கு ஒரு குழுவாக புனித யாத்திரை சென்றிருந்தார்கள்.

அவர்கள் நேபாளத்திலிருக்கும்போதுதான் அந்த பயங்கர பெருவெள்ளம் ஆயிரக்கணக்கானோரை வாரிச் சென்றது.
பெருவெள்ளத்துக்குப் பின், சந்தோஷ் குடும்பத்துடனான வாட்ஸ் ஆப் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கிறார் அவரது சகோதரரான முரளி.
இந்நிலையில், பிரித்தானியக் குடிமகனான சந்தோஷின் சகோதரர் முரளி, தன் சகோதரர் குடும்பம் குறித்து ஏதேனும் தகவல் கிடைக்காதா என தான் தொலைபேசியின் அருகிலேயே காத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.
சகோதரரின் குரலைக் கேட்கவேண்டும், அவர் என் பெயரைக் கூறி என்னை அழைப்பதைக் கேட்கவேண்டும் எனக்கூறும் முரளி, அண்ணா நான் உங்களை நேசிக்கிறேன் என்று கூறும்போது, அவரது குரல் தழுதழுக்கிறது.

என் சகோதரர் குடும்பத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. இதுவரை எந்த தகவலும் இல்லை, தூதரகம் உதவியாக உள்ளதை மறுப்பதற்கில்லை, என்றாலும், உதவிகரமான எந்த தகவலும் இல்லை என்கிறார் முரளி.
இதற்கிடையில், தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட, அவர்கள் என்ன ஆனார்கள், உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல் தவிக்கும் விடயம்தான் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என மாயமான பலருடைய உறவினர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |