பிரித்தானியாவில் அதிகரிக்கும் கட்டுமானப்பணியாளர்கள் பற்றாக்குறை: மலைக்கவைக்கும் ஆண்டு ஊதியம்
பிரித்தானியாவில் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு செங்கற்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொத்தனார்களின் தேவை அதிகம்
பிரித்தானியாவில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் சிலர் ஆண்டுக்கு 125,000 பவுண்டுகள் வரையில் ஊதியமாக பெறுகின்றனர். மேலும், கட்டுமானத்தொழிலில், தற்போது சுமார் 70,000 கொத்தனார்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும், கொத்தனார்களின் தேவை அதிகமாக இருப்பதாகவும் கட்டுமானத்தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றால், ஆண்டுக்கு 300,000 குடியிருப்புகள் என்ற அரசாங்கத்தின் இலக்கை எட்டுவது என்பது சாத்தியமற்றதாக மாறும் எனவும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
கட்டுமானப்பணிகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. மேலும், கொத்தனார்களில் ஜூனியர்களுக்கு வாரத்திற்கு 1,000 பவுண்டுகள் ஊதியமும் அனுபவமுள்ளவர்களுக்கு வாரத்திற்கு 2,500 பவுண்டுகளும் சில நிறுவனங்கள் ஊதியமாக வழங்கி வருகிறது.
விசா விதிகளின் விதிவிலக்கு
வெளிநாட்டு கட்டுமானப்பணியாளர்களுக்கு பிரித்தானிய பிரதமர் அலுவலகம் விசா விதிகளின் விதிவிலக்கு அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானிய அரசாங்கம் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளுக்காக 11.5 பில்லியன் பவுண்டுகள் தொகையை முதலீடு செய்ய இருக்கிறது.
ஆனால் தற்போதைய சூழலில் அனுபவம் மிக்க தொழிலாளர்கள் தேவை என அமைச்சர் Robert Halfon தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.