திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
லெபனான் நாட்டில் மூன்று அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை பலியான நிலையில், பலர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
லெபனானின் திரிபோலி எனும் நகரில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் அடுக்குமாடி கட்டிடம் இடித்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து அனைத்து வீடுகளும் இடிந்து தரைமட்டமாயின.
Photo Credit: Khaled Habashiti/Xinhua
அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த மக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பயத்தில் அபய குரல் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
Photo Credit: Khaled Habashiti/Xinhua
பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் குழந்தை ஒன்று பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
மீட்புப் படையினர் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து அறிந்த அந்நாட்டு பிரதமர் நஜீப் மிகாடி, அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளார். மேலும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Photo Credit: Khaled Habashiti/Xinhua
Photo Credit: Khaled Habashiti/Xinhua
Photo Credit: Khaled Habashiti/Xinhua