பிரபல ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் பயங்கரம்: பேருந்து தீ விபத்தில் 46 பயணிகள் பலி
பல்கேரியாவில் நடந்த பயங்கரமான பேருந்து தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பல்கேரியா நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, 53 பேர் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 46 பேர் உயிரிழந்தனர்.
எரியும் பேருந்தில் இருந்து குதித்த 7 பேர், தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
Photo: REUTERS
சோபியாவிற்கு மேற்கே 28 மைல் தொலைவில் உள்ள ஸ்ட்ரூமா நெடுஞ்சாலையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. "பஸ் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது அல்லது விபத்துக்குள்ளாகி பின்னர் தீப்பிடித்தது" என்று நிகோலாய் நிகோலோவ் கூறினார்.
பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று அந்நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் பிடிவியிடம் தெரிவித்தார்.
Photo: REUTERS
துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு வார இறுதி விடுமுறைப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் தலைநகர் ஸ்கோப்ஜேவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்று வடக்கு மாசிடோனிய வெளியுறவு அமைச்சர் புஜார் ஒஸ்மான் கூறினார்.
உயிர் பிழைத்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீல் வைக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் அவசரகாலக் குழுவினரால் எரிந்த பேருந்து சுற்றி வளைக்கப்பட்டதை காட்சிகள் காட்டுகின்றன.
பல்கேரிய இடைக்கால பிரதமர் ஸ்டீபன் யானேவ் அந்த இடத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
Photo: REUTERS
Photo: REUTERS