தயவு செய்து திரும்பி வா! தமிழ்ப்பெண்ணான மனைவியை நினைத்து உருகும் இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மனைவி குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு பும்ரா தயாராகி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது பங்களிப்பை கொடுக்க காத்திருக்கிறார்.
பும்ராவுக்கும், சஞ்சனா கணேசன் என்ற தமிழ்ப்பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு அவரை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார் பும்ரா.
அதில், தயவு செய்து சீக்கிரம் திரும்பி வா, என இருவரும் சிரித்தப்படி இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதற்கு பதில் பதிவிட்ட சஞ்சனா கணேசன், வீட்டிற்கு தான் ஓடி வந்து கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.