கால்பந்து ஜாம்பவான் ஸ்லாடன் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அளித்த சிறப்பு பரிசு
கால்பந்து ஜாம்பவான் ஸ்லாடன் இப்ராஹிமோவிக்கிடமிருந்து ஏசி மிலான் ஜெர்சியைப் பெற்றதில் இந்தியாவின் பிரபல பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிகுந்த மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.
கையொப்பமிடப்பட்ட ஜெர்சி
தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பும்ரா இதை வெளிப்படுத்தியுள்ளார். கையொப்பமிடப்பட்ட ஜெர்சியைப் பெற்றதற்காக பும்ரா தனது மனைவி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும் நன்றி தெரிவித்தார்.
ஒரு தீவிர கால்பந்து ரசிகரான பும்ரா எப்போதும் விளையாட்டின் சிறந்த வீரர்களை மதிப்பவர். சமீபத்தில், இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி ரெட் டெவில்ஸ் என கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இரு தரப்பு வீரர்களும் ஜெர்சிகளை பரிமாறிக்கொண்டனர் மற்றும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களை பரவசப்படுத்தும் மறக்கமுடியாத புகைப்படங்களையும் பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பும்ரா தனது ஜெர்சியை டிஃபென்டர் ஹாரி மாகுவேருடன் பரிமாறிக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது ஸ்வீடன் கால்பந்து ஜாம்பவான் ஸ்லாடன் இப்ராஹிமோவிக்கிடமிருந்து சிறப்பு பரிசாக கையொப்பமிடப்பட்ட ஜெர்சியைப் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |