சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி?

police investigation
By Balamanuvelan May 13, 2021 09:09 AM GMT
Report

கிரீஸ் நாட்டில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவர், கொள்ளையர்களால் சுமார் ஒரு மணி நேரம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், அதிகாலை, பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைந்து பாபிஸை கயிற்றால் கட்டி தரையில் வீசிவிட்டு, கரோலினை கட்டிலுடன் இணைத்துக் கட்டிவைத்துவிட்டு, எங்கே பணத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு கரோலினை மிரட்டியிருக்கிறார்கள்.

தன் அன்பிற்குரியவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று பயந்த பாபிஸ், தான் பணம் வைத்திருந்த பெட்டி எங்கே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி? | Burglars Tortured Mum Tipped Off Cash Hidden

அந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள், மேலும் பணமும் நகையும் வேண்டும் என்று கூறி, அவர்களது 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, வீட்டில் வேறு எங்கே பணமும் நகைகளும் இருக்கின்றது என்று கேட்க, கரோலின் சத்தமிட்டிருக்கிறார்.

பாபிஸும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், என் மனைவியையும் குழந்தையையும் எதுவும் செய்யாதீர்கள் என்று கதறியிருக்கிறார்.

ஆனால், சிறிது நேரத்தில் திடீரென கரோலின் அமைதியாகிவிட, கொள்ளையர்கள் உடனே வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நடந்தது என்னவென்றால், கரோலின் சத்தமிட்டதால், அவரது கழுத்தை துணியால் ஒருவன் நெறித்திருக்கிறான். அதில் அவர் இறந்துவிடவே, கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக வெளியேறியிருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி? | Burglars Tortured Mum Tipped Off Cash Hidden

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பாக பாபிஸ் வீட்டில் பணம் இருப்பது எப்படி அந்த திருடர்களுக்கு தெரிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது, பாபிஸ் அப்போதுதான் ஒரு நிலம் வாங்கியிருக்கிறார். அதில் வீடு கட்டுவதற்கான பொருட்களை வாங்குவதற்காக அவரிடம் சுமார் 13,000 பவுண்டுகள் பணம் இருந்துள்ளது.

அதை அவர் வீட்டில் வைத்திருந்த விடயம் குறித்து யாரோ அந்த கொள்ளையர்களுக்கு துப்புக் கொடுத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள். இன்னொரு படி மேலே போய், ஒருவேளை தம்பதியரின் உறவினர்களிலேயே யாராவது துப்புக் கொடுத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்... வீட்டில் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி? | Burglars Tortured Mum Tipped Off Cash Hidden

இந்த திருடர்கள், கைகளில் ஆயுதம் வைத்திருந்தும், கரோலினை அவரது சட்டையைப் பயன்படுத்தியே, கைகளால் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள்.

அத்துடன், 11 மாதக் குழந்தையின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். ஆகவே, குற்றத்தை அனுபவித்துச் செய்யும் கும்பலாக இந்த கொள்ளைக் கும்பல் இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

கொள்ளையர்கள் தன் கழுத்தை நெறிக்கும்போது அவர்களுடன் கரோலின் போராடியதால், அவரது கை நகங்களில் அந்த கொள்ளையர்களின் DNA இருக்கலாம் என்பதால், அவரது நகம், அவரைக் கொல்ல பயன்படுத்திய சட்டை ஆகியவற்றைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.


மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US