மரண கிராமமாக மாற்றிவிட்டனர்! குமுறும் பிரித்தானியர்கள்
தங்கள் கடலோர ஹாட்ஸ்பாட்டை ஒரு மரண கிராமமாக இரண்டாவது வீட்டு உரிமையாளர்கள் மாற்றிவிட்டதாக, பிரித்தானியாவின் Burnham Overy Staithe மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரபலமான விடுமுறைப் பகுதி
இங்கிலாந்தின் மாவட்டமான North Norfolkயின் கடற்கரை கிராமம் Burnham Overy Staithe. இது மிகவும் பிரபலமான விடுமுறைப் பகுதி ஒன்றாகும்.
இங்குள்ள உள்ளூர்வாசிகளுக்கும், இரண்டாவது வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையிலான பதட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது.
கருத்துக்கணிப்பு ஒன்றில் இருதரப்பும் இடையிலான சிக்கல்கள் அப்பட்டமாக வெளியாகியுள்ளது. இதில் பதிலளித்த Burnham-யின் உள்ளூர் மக்களில் 45 சதவீதம் பேர், தற்போதைய வீடுகளின் கலவையில் மகிழ்ச்சியடையவில்லை என்றும், பணக்கார வெளியாட்களின் சந்தை விலை நிர்ணயம் குறித்தும் புகார் தெரிவித்தனர்.
மரண கிராமம்
மேலும் குறுகிய தெருக்களில் நெரிசல், வேகமான ஓட்டுநர்கள் மற்றும் கவனக்குறைவாக பார்க்கிங் இருக்கும்போது, பரபரப்பான கோடை மாதங்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கவலை தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக குளிர்கால மாதங்களில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லாததால், 216 சொத்துக்களில் 30 சதவீதத்திற்கும் குறைவானது தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதால், அவர்கள் ஒரு மரண கிராமத்தை உருவாக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |