27 உயிர்களை பலிகொண்ட கோர விபத்து! 20 பேர் காயம்
விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அவரச உதவியாளர்கள் அனுப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்
விபத்து நடந்த பகுதியானது கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும், பல இன மக்கள் அங்கு வசிப்பதாகவும் கூறப்படுகிறது
சீனாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
REUTERS PIC
இந்த விபத்தில் 27 பேர் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த 20 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.