பேருந்து மோதியதில்.. காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன்! பதற வைக்கும் வீடியோ காட்சி
பிரேசிலில் பேருந்து ஏற்படுத்திய கோர விபத்தில் 5 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்ட காட்சி காண்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள சா பாலோ நகரில் கண் மூடித்தனமாக பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது பஸ் திடீரென்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
அதில் காரில் பெற்றோர்களுடன் அமர்ந்திருந்த 5 வயது சிறுவன் சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டுள்ளான். பேருந்து மோதிய வேகத்தில் காரின் என்ஜின் பகுதி தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்நிலையில் காரில் இருந்து சாலையில் விழுந்த சிறுவன் பேருந்தின் டயரில் மாட்டிக்கொள்ளாமல் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.
சிறுவன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சி காண்போருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொலிஸ் அதிகாரிகள் பேருந்தை இயக்கி வந்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.