ஈரானின் புஷேர் அணு மின் நிலையம்... இஸ்ரேலை மிகக் கடுமையாக எச்சரித்த ரஷ்யா
ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் போன்ற பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
நிலைமை ஆபத்து நிறைந்ததாக
குறித்த அணுமின் நிலையத்தைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்த நிலையில், இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் இந்த அறிக்கையை தவறு என்று குறிப்பிட்டார்.
மட்டுமின்றி, தம்மால் தற்போது உறுதி செய்யவோ மறுக்கவோ முடியாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். புஷேர் ஈரானின் ஒரே இயங்கும் அணுமின் நிலையமாகும், இது ரஷ்யாவால் கட்டப்பட்டது.
புஷேர் அணுசக்தி நிலையத்தில் கட்டுமான வேலைகளில் ஈடுபடும் ரஷ்ய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இஸ்ரேல் ரஷ்யாவிற்கு உறுதியளித்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் புடின் பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரோசாட்டம், அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள நிலைமை ஆபத்து நிறைந்ததாக இருப்பதாக எச்சரித்தார்.
மேலும், ஈரானில் செயல்படும் முதல் மின் அலகில் தாக்குதல் நடத்தப்பட்டால், அது செர்னோபிலுக்கு இணையான பேரழிவாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 1986 ஆம் ஆண்டு சோவியத் உக்ரைனில் உள்ள செர்னோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை வெடித்த சம்பவம், உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு என்றே குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவை எச்சரிக்க விரும்புவதாக
ஆனால் தற்போதைய சூழலில் புஷேர் மீதான தாக்குதல் மிக மோசமானதாகவும் கொடுஞ்செயல் என்றும் தெரிவிக்கின்றனர். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதன் பின்னர் ரஷ்யா தனது சில நிபுணர்களை புஷேரிலிருந்து வெளியேற்றியுள்ளது.
இருப்பினும் நூற்றுக்கணக்கானோர் தற்போதும் புஷேரில் சிக்கியுள்ளதாக ரஷ்யா கூறுகிறது. அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் சட்டவிரோதமானவை என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியுள்ளார்.
மட்டுமின்றி, புஷேர் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து ரஷ்யா குறிப்பாக அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சூழ்நிலையில் இராணுவத் தலையீட்டிற்கு எதிராக அமெரிக்காவை எச்சரிக்க விரும்புவதாக குறிப்பிட்ட அவர், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |