புடினிடம் எச்சரிக்கையை வெளிப்படுத்திய ரஷ்ய வணிக தலைவர்கள்! உக்ரைன் மீதான போரினால் ஏற்பட்ட விளைவு
உக்ரைன் படையெடுப்பிற்குப் பின்னர் நடந்த பயமுறுத்தும் எண்ணிக்கையிலான தேசியமயமாக்கல்கள் குறித்து, ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் ரஷ்ய வணிகத் தலைவர்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்தியதாக செய்ய வெளியாகியுள்ளது.
வணிகத் தலைவர்கள் சந்திப்பு
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து உதவி வரும் நிலையில், ரஷ்ய வணிகத் தலைவர்கள் தேசியமயமாக்கல்கள் குறித்து ஜனாதிபதி புடினிடம் எச்சரிக்கையை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடின் இல்லத்தில் இரவு நடந்த கூட்டத்தில் டசன் கணக்கான ரஷ்ய வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளனர். இவர்களில் Sberbank CEO German Gref, ரஷ்ய ரயில்வே தலைவர் Oleg Belozerov மற்றும் Kamaz மற்றும் Sergei Kogogin உள்ளிட்டோரும் அடங்குவர்.
kremlin.ru
இரண்டு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில், ''எளிதாக இல்லை என்ற உணர்வுடன்'' கிரெம்ளின் அதன் நிதிக் கொள்கைகளை கடுமையாக்குவதற்குப் பதிலாக அதிகரித்த போர் செலவினங்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக வரிகளை ஒப்புக் கொண்டனர் என ரஷ்ய செய்தித்தாளான Vedomosti கூறியுள்ளது.
மேலும், 1990களில் அரசு நடத்தும் சந்தைப் பொருளாதாரத்திற்கு ரஷ்யா மாறியதைக் குறிக்கும் தனியார்மயமாக்கலை முறியடிப்பதற்கான சாத்தியமான கிரெம்ளின் முயற்சிகள் குறித்த வணிகர்களின் அச்சத்தை, அதிகாரிகள் ''முற்றிலும் அகற்ற'' முயற்சித்ததாக ஒரு உயர்மட்ட அரசாங்க ஆதாரம் Vedomostiயிடம் தெரிவித்தது.
நிதிச்சுமை
21 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, நூற்றுக்கணக்கான மேற்கத்திய நிறுவனங்கள் முழுமையாக வெளியேறியுள்ளன அல்லது ரஷ்யாவில் செயல்பாடுகளைத் திரும்பப் பெற்றுள்ளன.
அதேபோல், உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக பொருளாதார தடைகளை எதிர்கொண்டதால், நாட்டை விட்டு வெளியேற விரும்பும் வணிகங்களுக்கு தொடர்ச்சியான நிதிச் சுமைகளை ரஷ்யா சுமத்தியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, மாஸ்கோவிற்கு வெளியே புடினின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் ரஷ்யாவின் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும், ''நட்பற்ற'' நாடுகளில் இருந்து ரஷ்ய அதிகார வரம்பிற்கு சொத்துக்களை மாற்றும் நிறுவனங்களுக்கு நிலைமைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிரெம்ளின் கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |