போர் பதற்றத்தின் இடையே டெல் அவிவில் மது அருந்தும் பிரபலம்
இஸ்ரேலில் தஞ்சம் புகுந்துள்ள அமெரிக்க பிரபலம் கெய்ட்லின் ஜென்னர், டெல் அவிவில் மது அருந்தும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு சென்ற அமெரிக்க பிரபலம்
அமெரிக்க பிரபலமான கெய்ட்லின் ஜென்னர் Pride அணிவகுப்பில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
מה אתם עשיתם באזעקות? כי אני שותה יין עם קייטלין. pic.twitter.com/v3FHmixHjd
— Regev Gur (@RegevGur) June 13, 2025
ஆனால், ஈரானின் தாக்குதலால் ஏற்பட்ட போர் பதற்றத்தினால் உண்டான பாதுகாப்பு கவலைகள் காரணமாக அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது.
இதனால் கெய்ட்லின் ஜென்னர் டெல் அவிவ் நகரிலேயே தங்க வேண்டியதாகிவிட்டது. ஆனால், ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியதால் அந்நகரம் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளது.
இந்த நிலையில், கெய்ட்லின் ஜென்னர் ஒரு பதுங்கு குழியில் இருந்தவாறு கையில் மதுக்கிண்ணத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.
ஊடகவியலாளர் ரேகேவ் குர் இந்தப் படத்தைப் பதிவிட்டு, சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவத் தொடங்கினார்.
இதேபோல் கெய்ட்லின் ஜென்னர் ஒரு பதிவில், "டெல் அவிவில் அமைதியான இரவு. நமக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள். நாம் வெற்றி பெறுவோம். இப்போதும் எப்போதும் இல்லாத அளவிற்கு, இன்று இஸ்ரேலுடன் நிற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என கூறியிருக்கிறார்.
தங்குமிடங்களுக்குத் திரும்பிவிட்டோம்
மற்றொரு பதிவில், "நாங்கள் டெல் அவிவில் உள்ள தங்குமிடங்களுக்குத் திரும்பிவிட்டோம். இது ஈரானில் இருந்து மூன்றாவது அலைத் தாக்குதல் போல் தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.
We are back in the shelters in Tel Aviv. This looks like it is the third wave of attack from Iran.
— Caitlyn Jenner (@Caitlyn_Jenner) June 13, 2025
இதற்கிடையில், தி மிரர் செய்தி நிறுவனத்தின்படி, ஜென்னர் ஒரு உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசி, சோதனையின்போது தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தினார்.
அவர், "நான் என் மகள் கைலியுடன் பேசினேன். அவள் என்னைப் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தினாள். கவலைப்படாதே, நான் என்னைப் பாதுகாப்பாக வைத்திருப்பேன், அவர்கள் என்னை கவனித்துக்கொள்வார்கள் என்று நான் அவளுக்கு உறுதியளித்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |