சிரியா போரினால் மொத்தமாக கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியானது
சிரியாவில் 10 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரினால் மொத்தம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக சிரியா போர் தொடர்பில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ளது.
இதில், மொத்தம் 350,209 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமக இருக்கலாம் என்றே மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்று முன்னெடுத்த ஆய்வில், சிரியாவில் மொத்தம் 606,000 பேர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளது.
2015ல் போர் உச்சம் பெற்றிருந்த நிலையில், ஆயுதக் குழுக்கள் நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றின. ஆனால் ரஷ்ய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் சிரியா ராணுவத்தின் கை ஓங்கியது.
சிரியா ஜனாதிபதி ஆசாதின் அடக்கு முறைகளுக்கு எதிராக 2011ல் முதன் முறையாக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து வன்முறைகள் அதிகரிக்கவும், சிரியா ராணுவம் ரஷ்யாவின் துணையுடன் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.
இதனிடையே, 2014ல் ஐக்கிய நாடுகள் மன்றம் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்வதை நிறுத்திக்கொண்டது.
தற்போது போர் முடிந்து 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மன்றம் சிரியா போரினால் ஏற்பட்ட இறப்புகள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.