மொத்த விரல்களையும் உடைத்து... வெளிநாட்டில் கொடூர சித்திரவதைக்கு இலக்கான கேம்பிரிட்ஜ் மாணவர்
உளவாளி என தவறாக கைது செய்யப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்த கேம்பிரிட்ஜ் மாணவர் தொடர்பான வழக்கு விசாரணை ரோமில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உடல் முழுவதும் தீக்காயங்கள்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான 28 வயது Giulio Regeni எவ்வாறு கொடூர சித்திரவதையை எதிர்கொண்டார் என்பது குறித்து ரோம் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.
எகிப்திய உளவுத்துறையால் அந்த மாணவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் அனைத்தும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உடற்கூறு அறிக்கையில், அந்த இத்தாலிய மாணவரின் உடல் முழுவதும் தீக்காயங்கள் காணப்பட்டது என்றும், தீவிரமான சித்திரவதைக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதும் அம்பலமானது.
அவரது உடலில் 7 விலா எலும்புகள் உட்பட 2 டசின் எலும்புகள் உடைந்திருந்தது. அவரது அனைத்து விரல்களும் உடைக்கப்பட்டுள்ளது. கால் பாதங்களிலும் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டதும், நெருப்பு காயங்களும் காணப்பட்டது.
மட்டுமின்றி, அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதும் முதுகெலும்பு உடைந்திருந்ததும் உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அவரது கழுத்து உடைந்த காரணத்தால், மரணம் நேர்ந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு நெடுஞ்சாலை அருகே
எகிப்தில் வைத்தே மொத்த சித்திரவதையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவரின் மூக்கு நுனியால் அடையாளம் கண்டுள்ளதாக அவரது தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 4 எகிப்திய உளவுத்துறை அதிகாரிகள் இதுவரை இத்தாலிய நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. Giulio Regeni எகிப்தின் கெய்ரோ நகரில் தமது நண்பரை சந்திக்கும் பொருட்டு சென்றவர், அந்த நபரின் குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார்.
கடைசியாக அவர் 2016 ஜனவரி 26ம் திகதி அந்த குடியிருப்பில் காணப்பட்டார் என்றும், அதன் பின்னர் ஒரு வாரம் கடந்த நிலையில், அரை நிர்வாணமாக அவரது சடலம் கெய்ரோவிற்கும் அலெக்ஸாண்டிரியாவிற்கும் இடையே ஒரு நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
எகிப்து உளவுத்துறை தலைவரின் உத்தரவின் பேரிலேயே Giulio Regeni கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அரசாங்கம் பின்னர் உறுதி செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |