கர்ப்பிணிகளுக்கு கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படுமா?
- உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பாரக்கமால் அனைவரும் தாக்கி விஸ்வரூபம் எடுத்து கொண்டு வருகின்றனது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணிகள் போன்ற பலர் இவ்வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
இருப்பினும் சிலருக்கு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படுமா? குழந்தையை பாதிக்குமா? என்ற நிலவுவதுண்டு.
பொதுவாக சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போன்ற கொரோனா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கும் உண்டு.
கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
இதுவரை கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டிருக்கின்றன.
ஆனால் கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கு பின்பு மிக கவனமாக இருக்கவேண்டும். அப்போது கொரோனா தாக்கினால் அதன் பாதிப்பு ஒருவேளை அதிகமாக இருக்கலாம். அதனால் 7-ம் மாதத்திற்கு பின்பு கர்ப்பிணிகள் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்டவேண்டும்.
அந்தவகையில் இந்த கொரோனா காலக்கட்த்தில் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டியவை என்ன? கருசிதைவு ஏற்படுமா? என்ற கேள்விகளுக்கு தீர்வினை தற்போது இங்கு பார்ப்போம்.
தாயை கொரோனா தாக்கினால் குழந்தைக்கும் கொரோனா தாக்குமா?
தாயை கொரோனா தாக்கினால் அது அவரது வயிற்றுக்குழந்தையையும் பாதிக்கும் என்பதற்கோ, சிசுவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.
கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
பிரசவ நேரத்தில் தாய் கொரோனாவால் பாதித்திருந்தால், வைரஸ் தாய் மூலம் குழந்தையை தாக்கலாம்.
இருப்பினும் பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை.
தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவ வாய்ப்பு உண்டா?
பெண்கள் புகட்டும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவும் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.
அதே நேரத்தில் தாய்- குழந்தை இரண்டு பேருக்கும் இடையே தாய்ப்பால் புகட்டுவது மூலம் நெருக்கமான உடல்தொடர்பு ஏற்படுகிறது.
தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பால்புகட்டும்போது குழந்தையுடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்படுவதால், குழந்தைக்கு அது பரவக்கூடும். அதனால் முன்எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்.
தாய்ப்பாலில் பெருமளவு நோய் எதிர்ப்புசக்தி இருந்தாலும், தாய் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலே போதுமானது.
கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டியவை என்ன?
- கர்ப்பிணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
- மாஸ்க் அணிவதிலும், சோப்பிட்டு கைகளை கழுவுவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம்.
- பயணங்களை தவிர்த்திடுவது நல்லது. கட்டாயம் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றால், சொந்த வாகனங்களை பயன்படுத்தவேண்டும்.
- பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், உறவினர்கள் வந்து பார்ப்பதையும் தவிர்த்திடலாம்.
- பயணங்கள் செய்திருந்தாலோ, உடன் இருந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னால், அதை முழுமையாக ஏற்று தனிமையில் இருங்கள்.
- எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்றவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போது நீங்கள் கர்ப்பிணி என்பதை முதலிலே கூறிவிடுங்கள். வயிற்றில் இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம்.
- தாய்க்கு இருமலோ, தும்மலோ இருக்கும்போது குழந்தையை சற்று விலக்கிவைப்பது நல்லது.
- குழந்தையை தொடுவதற்கு முன்பும், பால் புட்டி- பிரெஸ்ட் பம்ப் போன்றவைகளை தொடுவதற்கு முன்பும் சோப்பிட்டு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளவேண்டும்.
- சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும்.
- தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். வைட்டமின், கால்சியம் மாத்திரைகளையும் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.