வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது இவ்வளவு ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கையாக இருங்க
கோடைக்காலத்தில் அதிக மக்கள் அருந்தும் பானமாக சாத்துக்குடி ஜூஸ் உள்ளது. இந்த சிட்ரஸ் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, உடலைக் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது.
சாத்துக்குடியில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் ஏராளமாக நிறைந்துள்ளது. குறிப்பாக நார்ச்சத்து , வைட்டமின் சி , கால்சியம் , இரும்புச்சத்து ,பொட்டாசியம் , காப்பர் போன்றவை அடங்கியுள்ளது.
இருப்பினும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸை அதிகம் எடுத்து கொள்ள கூடாது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் தற்போது வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- வெறும் வயிற்றில் சாத்துக்குடியை சாப்பிடும்போது இதிலுள்ள சுண்ணாம்பு தன்மை நம்முடைய வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் வயிற்றில் புண்கள் ஏற்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
- உணவுக் குழலில் இயற்கையாகவே அமிலத்தன்மை வாய்ந்தது சுண்ணாம்புத் தன்மை அதிகம் கொண்ட சாத்துக்குடி பழத்தை உண்பதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு வயிற்றில் புண் ஏற்படுகிறது.
- சாத்துக்குடி சாறு அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பல், பல் எனாமலில் பாதிப்பை ஏற்படுத்தும். ஈறுகளில் எரிச்சல் மற்றும் வேறு சில பிரச்சினைகள் உண்டாகக் கூடும்.
- சாத்துக்குடி ஜூஸ் அதை அதிக அளவில் உட்கொள்ளும்போது, அது வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து குமட்டல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
- பெண் கர்ப்பமாக இருக்கும்போது சாத்துக்குடி ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதிலுள்ள அதிகப்படியான அமிலத் தன்மை காரணமாக வயிறு வலி, வயிற்றுப் பிடிப்புகள் போன்றவை அதிகமாக ஏற்பட வாய்ப்பு உண்டு.