இரவு முழுவதும் தூங்கமுடியவில்லையா? வேலைக்கு போகாதீர்கள்: பிரித்தானிய அரசு எச்சரிக்கை
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லையா, விழித்தே இருந்தீர்களா? அப்படியானால், இரண்டு நாட்களுக்கு வேலைக்குப் போகாதீர்கள் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரசு எச்சரிக்கை
அதாவது, இந்த எச்சரிக்கை, வேகமாகப் பரவிவரும் நோராவைரஸ் தொற்று குறித்த எச்சரிக்கை ஆகும்.
ஆக, நோராவைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் விழித்தே இருந்தீர்களா?
Up in the night with symptoms of #norovirus?
— UK Health Security Agency (@UKHSA) February 25, 2025
🏠 The virus spreads easily and you should stay home for 48 hours after symptoms stop.
Read our blog post on how to manage symptoms and stop the spread: 👇https://t.co/w0IsDKq4Fk pic.twitter.com/AQWDKe2RFe
இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவக்கூடியதாகும். ஆகவே, தொற்றின் அறிகுறிகள் நின்றபிறகும், இரண்டு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கவேண்டும் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி எச்சரித்துள்ளது.
அத்துடன், அவ்வப்போது கைகளை சோப் மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவுதல் இந்த வைரஸ்தொற்று உங்களை பாதிக்காமல் தடுக்கும்.
உங்களுக்கு ஏற்கனவே தொற்று இருந்தால் கைகளைக் கழுவுதல், உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் என்றும் பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |