உக்ரைன் போர்: இரு தரப்பிலும் சிக்கல்... போரை தொடர முடியுமா? நிபுணரின் பதில்
உக்ரைன் போர் இதற்கு மேல் அடுத்த அடி நகரமுடியாத ஒரு நிலையை எட்டியுள்ளது என்கிறார் நிபுணர் ஒருவர்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவி 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இரு தரப்பிலும் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கும் ஸ்வீடன் நாட்டு பொருளாதார நிபுணரும், ரஷ்யா தொடர்பிலான விடயங்களில் நிபுணருமான Anders Aslund என்பவர் சில முக்கிய விடயங்களை கணித்துள்ளார்.
அதாவது, உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகள் சோவியத் ஆப்கன் போரில் உயிரிழந்தவர்களை விட இரண்டு மடங்கு அதிக படைவீரர்களை ரஷ்யா இழந்துள்ளது.
ஆக, ரஷ்யா ஏராளமான படைவீரர்களை இழந்துள்ளது, ஆனால், உக்ரைன் நினைத்தாலோ, அதனால் ஒரு மில்லியன் வீரர்களைக் கூட திரட்ட முடியும் என்கிறார் Anders Aslund.
அதேபோல, உக்ரைன் தரப்பைப் பார்த்தால் அவர்களுடைய ஆயுதங்கள் குறிப்பாக குண்டுகள் சீக்கிரம் காலியாக இருக்கின்றன.
ரஷ்யாவிடமோ, எக்கச்சக்கமான ஆயுதங்களும் குண்டுகளும் உள்ளன.
எனவே, ஒரு பக்கம் வீரர்கள் தட்டுப்பாடு, மறுபக்கம் குண்டுகள் தட்டுப்பாடு என்ற நிலை உருவாகியுள்ளதால், இதற்கு மேல் அடுத்த அடி நகரமுடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது என்கிறார் Anders Aslund.