புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் கனடா
புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது.
கனேடிய ராணுவம் புதிய ஹெலிகாப்டர் படையை உருவாக்க 18.4 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது.
ஆர்க்டிக்கில் F-35 ஜெட் விமான விபத்துகளுக்கு விரைவாக பதிலளிக்க உதவியாக இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகிறது.
புதிய திட்டம் & கனேடிய ராணுவத்தின் நோக்கம்
கனேடிய விமானப்படை அதிகாரி பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச ராணுவ ஹெலிகாப்டர் மாநாட்டில் இந்த புதிய திட்டத்தை வெளிப்படுத்தினார்.
Royal Canadian Air Force (RCAF) தற்போது பயன்படுத்தும் Griffon ஹெலிகாப்டர்களை மாற்ற புதிய ரோட்டரி விமானங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து செயல்பட பயன்படும்.
ஆர்க்டிக் பகுதியில் நெருக்கடி நிலை
கனடாவின் வடக்கு மற்றும் ஆர்க்டிக் பகுதியில் போதிய உள்கட்டமைப்பு இல்லை என்பதால், அங்கு F-35 விபத்துகள் ஏற்பட்டால் மீட்பு பணிகள் கடினமாக இருக்கும்.
2010 முதல் F-35 யின் ஒற்றை என்ஜின் இருப்பது ஆபத்தாக பார்க்கப்பட்டது, ஏனெனில் முன்பு பயன்படுத்திய CF-18 போர் விமானங்களில் இரண்டு என்ஜின்கள் இருந்தன.
2010-ல் F-35 இயந்திரம் தோல்வியடையும் சாத்தியம் குறித்து கேட்கப்பட்டபோது, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் Peter MacKay "அப்படி நடக்காது" என்று பதிலளித்திருந்தார்.
புதிய ஹெலிகாப்டர்களின் செயல்பாடு
புதிய ஹெலிகாப்டர்கள் 2033-ல் பயன்படுத்தத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
82 Griffon ஹெலிகாப்டர்கள் தற்போது 11 மையங்களில் செயல்பட்டு வருகின்றன.
2024 ஜனவரியில், கனடா $2 பில்லியன் ஒப்பந்தத்தை Bell Textron Canada-க்கு வழங்கியது.
Griffon ஹெலிகாப்டர்கள் 2030கள் வரை செயல்படும் வகையில் மேம்படுத்தப்படும்.
F-35 வாங்குவதில் கவலைகள்
88 F-35 போர் விமானங்களை $19 பில்லியன் செலவில் கனடா வாங்குகிறது.
ஆனால், அமெரிக்கா-கனடா உறவில் திருப்பம் ஏற்படும்போது, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கனடாவின் F-35 விமானங்கள் இருக்கும் என்பது ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை 51வது அமெரிக்க மாநிலமாக இணைப்பது பற்றி தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |