அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு புதிய வழிகாட்டுதல் வெளியீடு
அமெரிக்காவிற்கு பயணிக்கும் கனேடியர்களுக்கான வழிகாட்டுதலை கனடா புதுப்பித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் சில கொள்கைகள் காரணமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 முதல், அமெரிக்காவில் 30 நாட்களுக்கும் அதிகமாக தங்கவிருக்கும் கனேடியர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.
இது செய்யப்படவில்லை என்றால் அபராதம், தண்டனை, அல்லது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதாக கனடாவின் சுற்றுலா அறிவிப்பு தெரிவிக்கிறது.
இதற்கு முன்னர் இந்த விதி அமல்படுத்தப்படவில்லை. ஆனால், “Protecting the American People Against Invasion” (அமெரிக்க மக்களை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும் ஆணை) என்ற டிரம்பின் உத்தரவை முன்னிட்டு இதை அமெரிக்க அரசு கடுமையாக செயல்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க எல்லையில் விசா மற்றும் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளால் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், கடவுச்சீட்டில் பிறக்கும்போது பதிவுசெய்யப்பட்ட பாலின தகவல் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ட்ரம்பின் உத்தரவால் Transgender மற்றும் Bisexual சேர்ந்த நபர்கள் அமெரிக்கா பயணிக்க முன்வைக்கப்பட்டுள்ள தடைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக மோதலும், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ட்ரம்பின் கருத்தும் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கனேடியர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு பயணிப்பது குறைந்துள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வாகனத்தில் செல்லும் மக்கள் எண்ணிக்கை பிப்ரவரி மாதத்தில் 23% குறைந்துள்ளதோடு, விமானம் மூலம் சென்றவர்களின் எண்ணிக்கையும் 13.1% குறைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |