எப்போது உயிர் தப்புவது... காஸா எல்லையில் காத்துக்கிடக்கும் கனேடியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள்
இஸ்ரேலுக்கு செல்லாமல் காஸாவில் இருந்து வெளியேறும் ஒரே தடமான எகிப்து எல்லை தொடர்ந்து மூடியே இருப்பதால் கனேடியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் செய்வதறியாது ஸ்தம்பித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்
எகிப்து எல்லை இன்றும் மூடப்பட்டிருப்பதால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்து உயிர் தப்ப முடியாமல் உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
@epa
மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள், தேவாலயங்கள் என இலக்கு வைத்து பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்னிக்கை 10,500 கடந்துள்ளது.
இதில் 4,100க்கு மேலானவர்கள் சிறார்கள் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் பலர் பாலஸ்தீன பிராந்தியத்தில் இருந்து உயிர் தப்ப முடியாமல் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதனிடையே, ரஃபா எல்லைக் கடப்பு தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், புதன் கிழமையன்றும் எந்த கனேடியர்களும் காஸா பகுதியை விட்டு வெளியேற முடியவில்லை என்று கனடா அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
எகிப்தின் மறைமுக அரசியல்
பாதுகாப்பு அச்சுறுத்தல் தான் ரஃபா எல்லை திறக்காததன் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டாலும், இதன் பின்னனியில் எகிப்தின் மறைமுக அரசியல் இருப்பதாகவே கூறப்படுகிறது.
@reuters
இதனிடையே, எகிப்தில் உள்ள கனேடிய அதிகாரிகள், காஸா பிரதேசத்தை விட்டு வெளியேறுபவர்களை வரவேற்கவும், கெய்ரோவுக்குச் செல்வதற்கு உதவவும் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
காஸாவிலிருந்து வெளியேறும் கனேடியர்கள் மூன்று நாட்கள் வரை எகிப்தில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் கனேடிய அரசாங்கம் அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படை அத்தியாவசியங்களை அவர்களுக்கு அந்த நேரத்தில் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மட்டும் கனடாவுக்கு தொடர்புடையவர்கள், கனேடிய குடிமக்கள் உள்ளிட்ட 75 பேர்கள் ரஃபா எல்லையை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |