பிபிஎல் தொடரில் தோல்வி - பாகிஸ்தான் வீரர்கள் இடையே கடும் மோதல்
பிபிஎல் தொடரில் கியூட்டா கிளாடியேட்டர் அணி தோல்வியடைந்த நிலையில் அந்த அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது மீது முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன்று பாகிஸ்தானில் பிபிஎல் எனப்படும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 7வது சீசன் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் கலந்து கொண்ட அணிகளு்ள் ஒன்றான கியூட்டா கிளாடியேட்டர் அணிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் சர்ப்ராஸ் அகமது கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
Pakistan ko on duty beachne wala fixer jub niyat pe bhashan dega phir to Allah he Hafiz hai .#justsying
— Sarfaraz Ahmed (@SarfarazA_54) February 2, 2022
இந்த தொடரில் அந்த அணி இதுவரை 3 போட்டிகளில் 2 தோல்விகளையும் ஒரு வெற்றியையும் மட்டுமே பதிவு செய்துள்ளது.கிளாடியேட்டர் அணியின் தோல்விக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்ககாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.இதனால் சர்ப்ராஸ் அகமது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தனது யூ-ட்யூப் சேனலில் கடுமையாக விமர்சித்தார்.
அதில் சர்ப்ராஸ் தமக்கு சாதகமாக கூட எதுவும் செய்வதில்லை. அவரின் மோசமான செயல்பாட்டிற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் இருக்காது என நம்புகிறேன். பாகிஸ்தான் அணியில் அவர் 2வது தர விக்கெட் கீப்பராக இருப்பதுடன் பார்ம் இல்லாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக பயணம் செய்துவிட்டு மட்டும் வருகிறார். எனவே அவர் மற்ற வீரர்களின் விஷயத்தில் தலையிடுவதை விட தனது சொந்த செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்ப்ராஸ் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானுக்காக விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடுத்தவர்களின் செயல்பாடுகளைப் பற்றி முடிவு எடுப்பதில் கடைசி ஆளாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.