ரஷ்யாவின் 10 நாட்கள் திட்டம்... யார் யாரை கொல்ல வேண்டும்: கசிந்த ஆவணங்களால் அதிர்ச்சி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
10 நாட்களில் உக்ரைனை
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முன்னர் திட்டம் ஒன்றை வகுத்துள்ள ரஷ்யா, 10 நாட்களில் உக்ரைனை கைப்பற்றிவிட்டு, ஆகஸ்டு மாதம் தங்கள் நாட்டுடன் இணைக்கும் முடிவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
@skynews
மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரஷ்ய அதிகாரிகளுக்கு மட்டுமே உக்ரைன் மீதான படையெடுப்பு திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, இரண்டாம் நிலையில் இருக்கும் அதிகாரிகள் கூட உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து அறிந்திருக்கவில்லை.
மேலும், இராணுவத்தினருக்கு சில மணி நேரம் முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனில் முதற்கட்டமாக மின் நிலையங்கள், குடிநீர் விநியோகம், வான் எல்லை, மத்திய வங்கி மற்றும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றுவதே ரஷ்யாவின் திட்டமாக இருந்துள்ளது.
ரஷ்ய சிறப்புப் படையினருக்கு
மட்டுமின்றி, உக்ரைனின் முதன்மையான தலைவர்களை கொல்லவும் ரஷ்ய சிறப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் அதிரடியான நகர்வுகளை எதிர்கொள்ள முடியாமல், உக்ரைன் அரசாங்க அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் அல்லது சரணடைவார்கள் என்றே விளாடிமிர் புடின் நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.
@Wikimedia
அத்துடன், பெலாரஸ் சிறப்புப் படைகளை பயன்படுத்தி, முக்கிய அணுமின் நிலையங்களை கைப்பற்ரவும் ரஷ்யா திட்டமிட்டிருந்தது. மேலும், உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் வான் தாக்குதலை மட்டும் பயன்படுத்தி, நாட்டை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டிருந்தது.
மட்டுமின்றி, மின் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டாம் எனவும் ரஷ்யா திட்டமிட்டிருந்தது. அத்துடன், யார் யாரை கொல்ல வேண்டும் என நாங்குவகையாக பிரித்து, பட்டியல் ஒன்றையும் ரஷ்யா தயாரித்துள்ளது.
ஆனால், உக்ரைனின் கடுமையான எதிர்தாக்குதல்களால் ரஷ்யாவின் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாமல் போனது என்றே தகவல் வெளியாகியுள்ளது.