சடலத்தை தபால் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற 2 நபர்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
அயர்லாந்தில் ஓய்வூதியத்தை பெறும் முயற்சியில், இறந்துபோன முதியவரின் சடலத்தை தபால் நிலையத்திற்கு இரண்டு ஆண்கள் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம், நேற்று, அயர்லாந்தின் கார்லோ நகரத்தில் உள்ள Hosey's தபால் நிலையத்தில் நடந்துள்ளது.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, இரண்டு இளைஞர்கள் ஒரு இறந்தவரின் சடலத்தை முட்டுக்கொடுத்து உயிருடன் இருப்பவர் போல் இழுத்து சென்று, அவருக்கு வரவேண்டிய ஓய்வூதியத்தை வாங்க முயற்சித்துள்ளார்.
ஆனால் தபால் நிலைய ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, விசாரிக்க தொடங்கியபோது, இருவரும் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த வினோதமான சம்பவம் இப்போது கார்டாய் , ஐரிஷ் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த முதியவர் பெயர் Peadar Doyle, வயது 66 என கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் எப்படி உயிரிழந்தார், அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை தொடர்வதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேபோல், சந்தேக நபர்கள் இருவரும் 30 வயதுகளில் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
ஐரிஷ் டைம்ஸ் படி, வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ஸ்டேபிள்ஸ்டவுன் சாலையில் உள்ள Hosey's கடைக்குச் சென்ற ஒருவர், தன்னால் மற்றொரு நபரின் வாராந்திர ஓய்வூதியத்தைத் பெற முடியுமா என்று கேட்டபொது, இந்த நாடகம் வெளிப்பட்டது.
இறந்தவரின் உடல் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டது.