செல்போன் தராத கோபம்: 16 வயது டீனேஜர் குடும்பத்தையே கொலை செய்த கொடுமை!
பிரேசிலில் செல்போன் தொடர்பான பிரச்சனைக்கு பிறகு தனது குடும்பத்தினரை டீனேஜ் சிறுவன் ஒருவன் கொலை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனால் நேர்ந்த விபரீதம்
பிரேசிலின் சாவோ பாவுலோவில் உள்ள 16 வயதான சிறுவன், தனது செல்போனை பறித்தது தொடர்பான வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனது பெற்றோர்கள் மற்றும் சகோதரியை சுட்டுக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்து இருந்தாலும், திங்கட்கிழமை வரை கண்டுபிடிக்கப்படவில்லை, இதன் பிறகு தான், டீனேஜ் சிறுவன் தனது குற்றத்தை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை அதிகாரிகள், தத்தெடுக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோர் தனது செல்போனை பறிமுதல் செய்த பிறகு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் அவர், நகர காவலரான தனது தந்தையின் துறை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவரை சுட்டுக் கொலை செய்தார். பின்னர் அவர் தனது 16 வயது சகோதரியையும், பின்னர் வீட்டிற்கு திரும்பிய தனது தாயாரையும் கொலை செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குற்றவாளிக்கு உடந்தையாக இருந்தவர்கள் அல்லது இந்த சம்பவங்கள் குறித்து சிறுவன் யாரிடமாவது தொடர்பு கொண்டாரா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவன் தற்போது சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |