நள்ளிரவில் நெஞ்சு வலியால் துடி துடித்த நபர்! பரிசோதனையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்
நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது இதயத்தில் சிமெண்ட் துண்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஒன்றில் நெஞ்சு வலி காரணமாக 56 வயது நபரை அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு மேற்கொண்ட எக்ஸ்ரே பரிசோதனையில் அதிர்ச்சி தரும் விஷயம் வெளியாகியது.
நெஞ்சு வலி ஏற்பட்ட அந்த நபரின் இதயத்தில் சிமெண்ட் துண்டு சிக்கியிருப்பதை கண்டு மருத்துவர்கள் திகைத்து போயினர். அவரின் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் கூர்மையான சிமெண்ட் துண்டு சிக்கியிருப்பதால் அவரது இதயத்தில் ஒரு துளை ஏற்பட்டுள்ளது.
இதுதான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிக்கலான சூழலில் இருந்து அவரின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவரது இதயத்தில் இருந்து சிமெண்ட் கல் அகற்றப்பட்டு சிறப்பான முறையில் சிகிச்சை நடந்து முடிந்தது. அந்த நபரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற வினோத சம்பவம் அவ்வப்பொழுது பல்வேறு இடங்களில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.