ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசை தலையிட வலியுறுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தைக் கோரி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (34). 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் அவருக்கு செவியர் வேலை கிடைத்தது.
முதலில் தனக்கு உதவ முன்வந்து, பின் தன்னை துன்புறுத்தத் துவங்கி, தனது பாஸ்போர்ட்டையும் பிடுங்கிவைத்துக்கொண்ட ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவரிடமிருந்து எப்படியாவது தனது பாஸ்போர்ட்டை மீட்டு, தப்பி வந்துவிடவேண்டும் என திட்டமிட்ட நிமிஷா, அவருக்கு மயக்க ஊசி போட்டிருக்கிறார்.
ஆனால், மயக்க மருந்தின் அளவு அதிகமாகவே, மஹ்தி உயிரிழந்துள்ளார். மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
நிமிஷாவின் தண்டனையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்காத நிலையில், நாளை மறுநாள், அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி, நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், நிமிஷா விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தைக் கோரி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
ஆனால், நிமிஷா விடயத்தில் இந்திய அரசால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அட்டனி ஜெனரலான AG வெங்கடரமணி, ஏமனுடையை நிலைமையைப் பொருத்தவரை இது ஒரு சென்சிடிவான விடயம். ஆகவே, இந்திய அரசால் நிமிஷா விடயத்தில்பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது,
அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் தூதரக ரீதியான உறவு இல்லை என்று கூறியுள்ளார் வெங்கடரமணி.
ஒரு அளவுவரைதான் இந்திய அரசால் சில நடவடிக்கைகளை எடுக்கமுடியும். நாங்கள் அந்த எல்லையை அடைந்துவிட்டோம். பொதுவான முறையில் எதையாவது செய்து நிலைமையை சிக்கலாக்க விரும்பவில்லை.
ஆகவே, தனிப்பட்ட முறையில்தான் ஏதாவது செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏமன் நாட்டில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால், அச்சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இரத்தப்பணம் என்னும் ஒரு தொகையை செலுத்தினால், அவர்கள் குற்றவாளியை மன்னிப்பதாக அறிவிப்பார்கள்.
ஆனால், அது தூதரக முறையிலான அணுகல் அல்ல. ஆகவே, அது விடயமாக, ஏமன் நாட்டில் செல்வாக்கு மிக்க ஒருவரான ஒரு ஷேக்கின் உதவி நாட்டப்பட்டுள்ளது. அதுவும் எந்த பலனும் அளிக்கவில்லை என்றும் வெங்கடரமணி கூறியுள்ளார்.
ஆக, நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்பட்ட இன்னமும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாததால் அச்சம் மட்டுமே நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |