தோல்வியிலும் சாதனை படைத்த இலங்கை அணி! அதிரடி காட்டிய சமரி அதப்பத்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இலங்கை 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
ஸ்ம்ரிதி மந்தனா 80 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது. ஸ்ம்ரிதி மந்தனா 48 பந்துகளில் 80 ஓட்டங்களும், ஷபாலி வர்மா 46 பந்துகளில் 79 ஓட்டங்களும் விளாசினர்.

கடைசி வரை களத்தில் நின்ற ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 37 பந்துகளில் 52 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசினார்.
அதிகபட்ச ஸ்கோர்
ஹாசினி பெரேரா 33 (20) ஓட்டங்களும், நிலாக்ஷி சில்வா 23 (11) ஓட்டங்களும் குவித்தனர். எனினும், இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்களே எடுத்ததால், இந்தியா 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி தோல்வியுற்றாலும், மகளிர் டி20 போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.
இதற்கு முன் மலேசியா அணிக்கு எதிராக 184 ஓட்டங்கள் எடுத்ததே இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |