ஒரே நாளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த 1,000 புலம்பெயர்ந்தோர்: அரசின் புதிய உத்தரவு
கடந்த சனிக்கிழமையன்று, ஒரே நாளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த விடயம் பிரித்தானியர்களை கோபமடையவைத்துள்ளது.
அரசின் புதிய உத்தரவு
ஒரே நாளில்ஆயிரத்துக்கும் அதிகமான சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய புலம்பெயர்தல் மையம் ஒன்றிற்கு அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள Manston என்னுமிடத்தில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கை மைய ஊழியர்கள், இப்படி ஆயிரக்கணக்கில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்களைக் கையாள்வதற்காக ஓவர்டைம் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதாவது, பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்து புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஆயிரக்கணக்கில் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்: வேடிக்கை பார்க்கும் பிரான்ஸ் அதிகாரிகள்
சனிக்கிழமையன்று, 18 சிறுபடகுகளில், 1,194 சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |