ஆங்கில கால்வாய் அகதிகள் படகு விபத்து: 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் தொடங்கும் வழக்கு விசாரணை
English Channel Disaster: trial opens in Paris after 5 years: ஆங்கில கால்வாயில் நடந்த மோசமான அகதிகள் படகு விபத்து தொடர்பில் 5 ஆண்டுகளுக்கு பிறகு 14 பேர் மீது பாரிஸில் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மோசமான அகதிகள் படகு விபத்து
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிய படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்று 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
பிரான்ஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள கலே பகுதியில் உடல்கள் மிதப்பதை பிரெஞ்சு மீன்பிடி கண்டறிந்ததை தொடர்ந்து அவசர சேவைகள் மீட்பு பணியில் களமிறங்கினர்.
இதில் 27 உடல்கள் வரை மீட்கப்பட்டனர். 4 பேரின் நிலை குறித்து இதுவரை கண்டறிய முடியவில்லை.

இந்த விபத்தில் 2 பேர் மட்டுமே உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இதில் எத்தியோப்பியா, எகிப்து, சோமாலியா, ஈரான் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
5 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை
இந்த விபத்து சம்பவத்துக்கு கடலில் பயணிக்க தகுதியற்ற மற்றும் சான்றிதழ் பெறாத ரப்பர் படகுகளை பயன்படுத்தியதோடு அதிகப்படியான ஆட்களை ஏற்றியதே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்ற ஆவணங்கள் படி அந்த படகில் போதுமான உயிர்காக்கும் கவசங்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து மற்றும் மனிதக் கடத்தல் சம்பவத்திற்கு காரணமானவர்களாக கூறப்படும் 14 பேர் மீது 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் வழக்கு விசாரணையானது தொடங்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது சட்டவிரோத குடியேற்றத்திற்கு உடந்தையாக இருந்தது, கொலைக்கு அஞ்சாத குற்றம் செய்தல் ஆகிய தீவிரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணையானது செப்டம்பர் 30ம் திகதி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |