இளவரசர் சார்லஸ் மன்னராகும்போது ராஜ குடும்பத்தில் நடக்க இருக்கும் மாற்றங்கள்: வெளியாகியுள்ள தகவல்கள்
பிரித்தானிய மகாராணியார், தனது மகனான இளவரசர் சார்லஸின் மனைவியை ராணியாக ஏற்றுக்கொள்வதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அது தொடர்பான பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அவ்வகையில், இளவரசர் சார்லஸ் மன்னராகும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது தொடர்பாக ஒரு செய்தி வந்துள்ளது.
உலகத்தைப் பொருத்தவரை பிரித்தானிய ராஜ அரண்மனை என்பது பக்கிங்காம் மாளிகைதான். இன்னமும் அங்கு நடக்கும் Changing of the Guard ceremony என்னும் நிகழ்வைக் காண ஏராளம் சுற்றுலாப் பயணிகள் கூடுகிறார்கள்.
ஆனால், விடயம் என்னெவென்றால், அங்கு தற்போது ராஜ குடும்பத்தினர் யாரும் வாழவில்லை. மகாராணியார் விண்ட்சர் மாளிகையில் வாழ்கிறார். இளவரசர் சார்லஸும் அவரது மனைவியான கமீலாவும் கிளாரன்ஸ் ஹவுஸ் என்னும் மாளிகையில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆக, ராஜ குடும்பத்தினர் யாரும் வாழாத ஒரு வீட்டுக்கு என்ன கௌரவம் இருக்கமுடியும்?
ஆகவே, இளவரசர் சார்லஸ் மன்னரானதும், அவரும் கமீலாவும் பக்கிங்காம் மாளிகைக்கு குடிபெயர இருக்கிறார்களாம்.
அப்படியானால், அவர்கள் இப்போது வாழும் கிளாரன்ஸ் இல்லத்துக்கு, இளவரசர் வில்லியமும் கேட்டும் குடிபுகவேண்டும். ஆனால், தங்கள் மூன்று பிள்ளைகள் பிறந்து செட்டில் ஆகிவிட்ட கென்சிங்க்டன் மாளிகையை விட்டு வர அவர்களுக்கு விருப்பம் இல்லையாம்.
இளவரசர் ஹரியோ, தனக்கு கிடைக்க இருந்த அனைத்தையும் அர்த்தமில்லாமல் ஒரு நடிகைக்காக விட்டுவிட்டுப் போய்விட்டதால், அவர் இந்த திட்டத்தில் இல்லவேயில்லை.
எப்படியும், இளவரசர் சார்லஸுக்கு மகாராணியார் பச்சைக் கொடி காட்டிவிட்டதைத் தொடர்ந்து அமைதியாக பல மாற்றங்கள் ராஜ குடும்பத்துக்குள் நடந்து வருகின்றனவாம்.