ஹரி மேகன் தம்பதிக்கு மகாராணியார் வைத்த செக்... மார்ச் 7 அன்று உலகமே பார்க்க இருக்கும் வேடிக்கை!

Queen Elizabeth II Checkmate Harry and Meghan couple Oprah Winfrey March 7th
By Balakumar Feb 22, 2021 09:10 PM GMT
Report

ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறிய நாள் முதல் இளவரசர் ஹரியும் மேகனும் செய்யும் ஒவ்வொரு செயலும் அரண்மனை வட்டாரத்தை எரிச்சலூட்டும் விதமாகவே உள்ளன.

அவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல், ஹரியும் மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓபரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றைக் கொடுக்க முடிவு செய்துள்ளார்கள்.

மேகன் ஹரியை திருமணம் முடித்த நாள் முதலே அரண்மனையில் அவ்வப்போது ராஜ குடும்ப மரபுகள் மீறலைக் காண முடிந்தது. ஒரு நடிகையாக வாழ்க்கையைத் துவக்கிய அமெரிக்கப் பெண்ணான மேகன், ராஜ குடும்ப வாழ்க்கையுடன் ஒத்துப்போக திணறினார்.

ஹரி மேகனுக்கு உதவியாக பணியாற்றிய பலர், மேகனுடைய தேவைகளை சந்திக்க இயலாமல் வேலையை ராஜினாமா செய்தனர்.

ஹரி மேகன் தம்பதிக்கு மகாராணியார் வைத்த செக்... மார்ச் 7 அன்று உலகமே பார்க்க இருக்கும் வேடிக்கை! | Checkmate By The Queen To Harry Meghan Couple

மேகன் கேட்பது எதுவோ, அது அவருக்கு கொடுக்கப்படவேண்டும் என ஹரி கூற, வேறு வழியில்லாமல் மகாராணியார் குறுக்கிட்டு, ஹரிக்கு மரபுகளை நினைவுபடுத்தவேண்டியிருந்தது.

மேகன் ராஜ குடும்ப பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வார் என எதிர்பார்த்தால், அவர் தனது பழக்கவழக்கங்களுக்கு ஹரியை ஆடச்செய்து, ஒரு நாள் மகாராணியாரிடம் கூட சொல்லாமல், திடீரென ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது ஹரி மேகன் தம்பதி.

பின்னர் இருவரும் கனடாவில் குடியேறினார்கள், கனடா ஒத்துப்போகாமல் பின்னர் அமெரிக்காவுக்கு குடியேறினார்கள்.

அங்கே போய் அரசியல் விமர்சனம் செய்ய, அப்போது அதிபராக இருந்த ட்ரம்ப் மேகனை அவமதிக்கும் விதமாக சுடச்சுட பதிலளித்தார்.

இப்படி மேகன் அரண்மனைக்குள் கால் வைத்த நாளில் தொடங்கிய பிரச்சினைகள் இன்றுவரை முடிந்தபாடில்லை.

இதற்கிடையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓபரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றைக் கொடுக்க முடிவு செய்துள்ளார்கள் ஹரியும் மேகனும்.

ஓபரா என்ன வேண்டுமானாலும் கேட்பார், அவர் என்னென்ன கேட்பாரோ, ஏற்கனவே ராஜ குடும்ப மரபுகளை மீறி பேசிவரும் மேகன் என்னென்ன சொல்வாரோ என அரண்மனை வட்டாரம் கடும் அழுத்தத்திற்குள்ளாகியது.

இந்நிலையில், உலகமே ஹரி மேகன் பேட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய மகாராணியார் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது, ஹரி மேகன் பேட்டி ஒளிபரப்பாகும் அதே நாளில், ஓபராவின் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு சில மணி நேரம் முன்பாகவே, மகாராணியாரும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களும் நாட்டு மக்கள் முன் தொலைக்காட்சியில் உரையாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

ஹரி மேகனின் அமெரிக்க தொலைக்காட்சி பேட்டி, மார்ச் மாதம் 7ஆம் திகதி ஒளிபரப்பாக உள்ளது.

அதே நாளில், அவர்களது பேட்டி ஒளிபரப்பாவதற்கு முன்பே, மகாராணியாரின் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் நிலையில், நிச்சயம் ஹரி மேகன் நிகழ்ச்சிக்கு அது ஒரு பெரிய அடியாக இருக்கும்.

'Celebration for Commonwealth Day', அதாவது காமன்வெல்த் நாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பிரித்தானிய மகாராணியார் மட்டுமின்றி, இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா, இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசி சோஃபி ஆகியோரும் அன்றைய நிகழ்ச்சியில் மக்கள் முன் தோன்ற இருக்கிறார்கள்.

ஏற்கனவே, ஹரி மேகன் மீது மக்கள் பலர் கோபத்தில் இருக்கும் நிலையில், ராஜ குடும்பத்தின்மீது அவ்வளவு பற்றுவைத்திருக்கும் எந்த பிரித்தானியரும், மகாராணியாரின் நிகழ்ச்சியை விட்டுவிட்டு ஹரி மேகன் நிகழ்ச்சியை பார்க்கப்போவதில்லை.

அத்துடன், அப்படியே அவர்கள் பார்த்தாலும், அவர்கள் மனதில் மகாராணியாரின் உரையின் தாக்கம்தான் நிறைந்திருக்கும்.

ஹரி மேகன் தம்பதிக்கு மகாராணியார் வைத்த செக்... மார்ச் 7 அன்று உலகமே பார்க்க இருக்கும் வேடிக்கை! | Checkmate By The Queen To Harry Meghan Couple

இன்னொரு முக்கிய விடயம், சென்ற ஆண்டு இதே காமன்வெல்த் ஆராதனையின்போதுதான் ஹரி மேகன் தம்பதி தங்கள் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறினார்கள், அதை மக்கள் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள்!

இந்நிலையில், தற்போது ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே ஹரி மேகன் பேட்டி பதிவு செய்யப்பட்டாகிவிட்டது. பதிவு செய்யப்பட்ட பேட்டியைத்தான் 7ஆம் திகதி ஒளிபரப்பப்போகிறார்கள்.

ஆனால், இனிமேல்தான் ஒளிபரப்பப்பட இருக்கும் அந்த பேட்டியால் ராஜ குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், அதற்குப் பின் மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஆகிய விடயங்கள் நடைபெற்றுள்ளதையடுத்து, அந்த பேட்டியில் மாற்றங்கள் செய்யப்படலாம், ஏன் சில விடயங்கள் மீண்டும் பதிவு செய்யப்படலாம் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் பேட்டி பதிவானதுமே ஹரி மேகனின் ராஜ குடும்ப பட்டங்கள் பறிக்கப்பட்டுவிட்டன, இப்படி நடக்கும் என எதிர்பார்க்காததாலும், இன்னமும் தங்களுக்கு ராஜ குடும்ப பொறுப்புகள் இருப்பதாகவும் நினைத்துக்கொண்டு பேட்டியளித்ததாலும், இப்போது இருவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்போது, அவர்களது பட்டங்களைத் தவிர்த்து ராஜ குடும்பத்தில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தங்கள் பேட்டியால் இப்படியெல்லாம் ஆகும் என அமெரிக்க தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

ஆக, தாங்கள் எதிர்காலத்திலும் ராஜ குடும்பத்துடன் இணைந்திருப்போம் என்ற எண்ணத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கு இப்போது அர்த்தம் இல்லாமல் போனதால், பேட்டியில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

அரண்மனை ஆதரவையும் இழந்து, அமெரிக்க தொலைக்காட்சி பேட்டியால் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட புகழையும் இழந்து நிற்கப்போகிறார்களா ஹரியும் மேகனும்? மார்ச் 7ஆம் திகதிக்குப் பின்னர்தான் அதெல்லாம் தெரியவரும், பொறுத்திருந்து பார்ப்போம்!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US