அஸ்வினை நாங்க உலகக்கோப்பைக்கு எடுக்க இது தான் காரணம்! தேர்வுக்குழு தலைவர் விளக்கம்
இந்திய அணியின் தேர்வு குழு தலைவர், அஸ்வினை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எடுத்தற்கான காரணத்தை கூறியுள்ளார்.
உலகக்கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு பின்பு, அவர் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அவரை தேர்வு குழு எடுக்க என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வந்தது.
அது குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் Chetan Sharma கூறுகையில், அஸ்வின் தற்போது வரை ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவரின் ஆட்டமும் நன்றாகவே உள்ளது.
உலகக்கோப்பை போன்ற பெரிய தொடருக்கு, நல்லதொரு சுழற்பந்து வீச்சாளர் தேவை.
அதிலும், தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால், நிச்சயமாக சுழற்பச்சு வீச்சு நன்கு அங்கு எடுபடும். எனவே அதை கருத்தில் கொண்டு, நாங்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரை அணியில் முக்கிய வீரராக வைத்திருந்தோம்.
ஐபிஎல் தொடரை வைத்தே அஸ்வினை எடுத்தோம். ஐபிஎல் தொடரில், உலகின் திறமையான வீரர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றனர்.
அப்படி வலுவான வீரர்களுக்கு எதிராக அஷ்வின் கொடுத்த சிறப்பான செயல்பாடே அவரைத் தேர்வு செய்ய வைத்தது என கூறியுள்ளார்.