பட்டப்பகலில் பொதுமக்கள் கூடி நிற்க மரணத்தண்டனை நிறைவேற்றம்: வெளிவரும் பகீர் சம்பவம்
ஏமனில் சிறார்களை கொலை செய்த வழக்கில் சிக்கிய மூவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் அமைந்துள்ள Tahrir சதுக்கத்தில் புதன்கிழமை பட்டப்பகலில் இந்த பகீர் சம்பவம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறையில் பயன்படுத்தப்படும் நீல உடையுடன் Ali al-Naami(40), Abdullah Al-Makhali(38, மற்றும் Mohammed Arman(33) ஆகியோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில், குற்றவாளிகள் மூவரையும் கவிழ்ந்து படுக்க வைத்து, பின்னர் அவர்களின் முதுகில் துப்பாக்கியால் சுட்டு மரணத் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
கடைசியாக சனா நகரில் கடந்த 2018 ஆகஸ்டு மாதம் பொதுமக்கள் மத்தியில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிறார் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டு, அவர்களின் உடல்களை கிரேன் ஒன்றில் கட்டி தொங்க விடப்பட்டது.
புதன்கிழமை மரணத் தண்டனைக்கு இலக்கானவர்கள் குறிப்பாக கொடூரமான குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். இதில், Abdullah Ali al-Mukhali மற்றும் Mohammed Arman ஆகிய இருவரும் 8 வயது சிறுவனை கடத்திச் சென்று சீரழித்து, கொலை செய்தவர்கள்.
al-Naami என்பவர் 2019 ஜூன் மாதம் தமது பிஞ்சு குழந்தைகள் மூவரை கொன்ற குற்றத்திற்காக கைதானவர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி வீட்டை விட்டு வெளியேற, அந்த ஆத்திரத்தில் தமது மூன்று பிள்ளைகளை கழுதை நெரித்து கொன்று, தண்ணீர் தொட்டியில் மறைவு செய்திருந்தார் al-Naami.
பொலிஸ் விசாரணையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார் al-Naami. இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு மரணத் தண்டனை விதித்திருந்தது.
இந்த நிலையிலேயே பொதுமக்கள் முன்னிலையில், தலைநகரின் முக்கிய சதுக்கத்தில் வைத்து மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களை கூடி இருந்த மக்கள் தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்தனர்.