சிறுவன் என கூறி பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய அகதி... டேட்டிங் செயலியால் ஏற்பட்ட நெருக்கடி
டேட்டிங் செயலி ஒன்றில் பதிவு செய்த இவர், தமக்கு 25 வயது என குறிப்பிட்டுள்ளார்.
சிறார்களுக்கான முக அமைப்பும் அவரிடம் இல்லை என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவன் என கூறி பிரித்தானியாவில் நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் டேட்டிங் செயலியால் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஈரானியரான Aria Ibrahimi என்பவரே தற்போது நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளார். தமக்கு 16 வயது எனவும் ஆதரவற்றவர் எனவும் கூறி, 2020 மே மாதம் இவர் பிரித்தானியாவில் நுழைந்துள்ளார்.
Image: Facebook
ஆனால், 30 முதல் 55 வயதுடையோர் பயன்படுத்தும் டேட்டிங் செயலி ஒன்றில் பதிவு செய்த இவர், தமக்கு 25 வயது என குறிப்பிட்டுள்ளார். ஆதரவற்ற 16 வயது இளைஞர் என்பதால், அவர் கென்ட் கவுண்டி கவுன்சிலால் கவனித்துக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையிலேயே ஆரியா இப்ராஹிமி டேட்டிங் செயலியால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். இவருக்கு 20ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கலாம் எனவும், உள்விவகாரத்துறை ஆவணங்களில் அவருக்கு தலையில் நரை முடி காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிறார்களுக்கான முக அமைப்பும் அவரிடம் இல்லை என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, பல்கலைக்கழக சமூக ஊடகக் குழுக்களிலும் அவர் பலமுறை பார்வையிட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
Image: Facebook
அத்துடன், 19 முதல் 25 வயதுடையோருக்கான டேட்டிங் செயலியிலும், 30 முதல் 55 வயதுடையோருக்கான செயலியிலும் அவர் இணைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது வயது 25 என நீதிமன்றம் தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்துள்ளதை அடுத்து, அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.