ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்: குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை
அக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர், 200க்கும் அதிகமானோரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 32 பேர் சிறுபிள்ளைகள் என தெரியவந்துள்ளது.
ஹமாஸ் பிடியில் 32 குழந்தைகள்
ஹமாஸ் பிடியிலிருக்கும் 32 சிறுபிள்ளைகளில், மிகவும் சிறிய குழந்தையின் பெயர் Kfir Bibas. அந்தக் குழந்தை பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியுள்ள நிலையில், அந்தக் குழந்தை, அதன் சகோதரன் Ariel மற்றும் பிள்ளைகளின் தாயாகிய Shiri (32) ஆகியோரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
Credit: Ian Whittaker
பிள்ளைகளில் அதிக வயதுடைய பிள்ளைகள் ஐந்து பேர். அவர்கள் 17 வயதுடையவர்கள். ஹமாஸ் பிடியில் பிணைக்கைதிகளாக உள்ள பிள்ளைகளின் படங்கள் மற்றும் பெயர்களை The Sun பத்திரிகை வெளியிட்டுள்ளது.
Credit: Ian Whittaker
குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை
இந்நிலையில், காசாவில், பூமிக்கடியில், 311 மைல் நீளமுள்ள சுரங்கங்களுக்குள் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு ஹமாஸிடம் பிள்ளைகளின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Credit: Ian Whittaker
இன்னொரு பக்கமோ, பிள்ளைகளை யாராவது பிணைக்கைதிகளாக பிடித்துவைப்பார்களா என பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்துவருகின்றன.
பெற்றோருக்கு ஆதரவாக கவலை தெரிவித்துள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிள்ளைகளை விடுவிக்குமாறு குரல் கொடுத்துவருகின்றன.
Credit: Ian Whittaker
இதற்கிடையில், அமெரிக்க பிணைக்கைதிகள் நிபுணரான Danielle Gilbert என்பவர், குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்வது அபூர்வம் என்றும், அப்படி சிறு குழந்தைகளை ஆபத்தான சூழலில் பிணைக்கைதிகளாக பிடித்து வைப்பது கடத்தியவர்களுக்கே கடினமான வேலையாகிவிடும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |