சிறார்களையும் விட்டுவைக்காத ராணுவம்: தடை விதிக்க மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு
ஒரு வருட காலமாக நீடித்துவரும் சூடான் உள்நாட்டுப் போர் தொடர்பில் பதறவைக்கும் தரவுகள் வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
சூடானின் டார்பூரில் நடந்த இனக்கலவரத்தில் இருந்து தப்பியோட முயன்ற பொதுமக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.
சிறார்களை வரிசையாக நிறுத்தி RSF என்ற துணை ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிக்க முயன்ற சிறுவர்களையே, துணை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இனவன்முறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மொத்தம் 221 பேர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.
அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த RSF என்ற துணை ராணுவத்தினர் டார்பூரில் அரேபியரல்லாத Masalit இன மக்களை சுமார் ஓராண்டு கால நீடித்த இனக்கலவரத்தினூடே இன அழிப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மட்டுமின்றி, பரவலாக போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதும், குறிப்பாக மேற்கு டார்பூரின் RSF தளபதி உட்பட மூவர் மீதும் போர் குற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மிக மோசமான சம்பவமாக
2023 ஏப்ரல் மாதம் RSF துணை ராணுவத்தினருக்கும் சூடான் ராணுவத்தினருக்கும் இடையேஎ போர் வெடித்த பின்னர் 8 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது டார்பூரில் உள்ள சூடான் ராணுவம் வசமிருக்கும் கடைசி நகரமான El Fasher பகுதியை RSF துணை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இது மிக மோசமான படுகொலைகளுக்கு வழிவகுக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் அச்சப்படுகின்றனர்.
சூடான் உள்நாட்டுப் போரில் மிக மோசமான சம்பவமாக பார்க்கப்படுவது, ஜூன் மாதம் El Geneina பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்களின் கிலோமீற்றர் நீண்ட வாகன வரிசையை RSF துணை ராணுவத்தினர் மற்றும் அதன் கூட்டுப்படைகள் தாக்கியதையே குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவத்தின் போதே சிறார்களை திரட்டி வைத்து RSF துணை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |