நள்ளிரவில் நடுங்கும் குளிரில் பக்கிங்காம் அரண்மனைக்கு முன் வந்த குழ்நதைகள் செய்த செயல்!
மறைந்த பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு மக்கள் இரவு முழுவதும் பக்கிங்காம் அரண்மனை முன் அஞ்சலி செலுத்தினர்.
நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு நடுங்கும் குளிரில் தந்தை அலெக்ஸூடன் அரண்மனையின் வாயில்களுக்கு முன் வந்த இரண்டு குழந்தைகள், வாயிலின் முன் மலர் வைத்து மறைந்த இளவரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து குழந்தைகளின் தந்தை அலெக்ஸ் கூறியதாவது, செய்தி அறிந்தவுடன் மாலையே வர வேண்டும் என நினைத்தோம், ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதை தவிர்க்க இரவில் வந்தோம் என கூறினார்.
இது மிகவும் சோகமான செய்தி, இதை கேட்டு நானும் சோகமடைந்தேன்.பின் குடும்பமாக நாங்கள் அரண்மனைக்கு நேரில் வந்து இளவரசர் பிலிப்பிற்கு அஞ்சலி செய்ய முடிவு செய்தோம் என குழந்தை Gabby கூறினார்.
இளவரசர் பிலிப்பை பற்றி எனக்கு சில விஷயங்கள் தெரியும், வரலாற்றில் அவரை பற்றி நான் படித்துள்ளேன் அது மிகவும் சுவாரஸ்யமானது என Gabby கூறினார்.