இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல்... பாகிஸ்தானை நவீன ஆயுதங்களால் வலுப்படுத்தும் சீனா
பாகிஸ்தான் தனது வான் சக்தியை வலுப்படுத்த சீனாவின் FC-31 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை சொந்தமாக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
சீன ஆயுதங்களை அதிகமாக
பாகிஸ்தான் விமானப்படை (PAF) இந்திய விமானப்படையுடன் ஒரு குறுகிய ஆனால் தீவிரமான மோதலில் ஈடுபட்ட வாரங்களுக்குப் பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சீனா விரைவில் அதன் ஷென்யாங் FC-31 "கைர்பால்கான்" ஸ்டெல்த் போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படைக்கு வழங்கத் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் விமானப்படை விமானிகள் தற்போது சீனாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. FC-31 போர் விமானமானது சீனாவின் PL-17 ஆகாய-வான் ஏவுகணை (AAM) உடன் பொருத்தப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், இந்த ஏவுகணை 400 கிலோமீற்றர் தூரம் வரை சென்று தாக்கும்.
சீனாவிற்கு வெளியே சீன ஆயுதங்களை அதிகமாக பயன்படுத்தும் நாடு பாகிஸ்தான். கடந்த 2022ல் சீனாவின் J-10CE போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியது. இந்த விமானங்களையே, 2025 மே மாதத்தில் இந்தியாவுடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்தியது.
மட்டுமின்றி, மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட பல்வேறு இந்திய போர் விமானங்களை வீழ்த்த சீனாவின் J-10CE போர் விமானங்களுடன் மிக ஆபத்தான PL-15E நீண்ட தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது.
விமானப்படையை எதிர்கொள்ள
இதன் காரணமாகவே தற்போது சீனாவின் FC-31 போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது, இந்தியா உடனான மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வாங்க முடிவு செய்த அதி நவீன விமானமாகும் சீனாவின் FC-31.
இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், நான்கு நாள் மோதலின் போது இந்திய விமானப்படை ஆறு போர் விமானங்கள், இரண்டு உயர் மதிப்பு கண்காணிப்பு விமானங்கள், ஒரு C-130 போக்குவரத்து விமானம், 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் பல எண்ணிக்கையிலான ட்ரோன்களை அழித்தது.
இந்தக் கூற்றுக்கள் உண்மையாக இருந்தால், இந்திய விமானப்படையை எதிர்கொள்ள பாகிஸ்தான் சில அதி நவீன விமான சக்தியைச் சேர்க்க வேண்டியிருக்கும். இதனையடுத்தே சீனாவின் FC-31 "கைர்பால்கான்" ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
வெளிவரும் தகவலின் அடிப்படையில் சீனாவிடம் இருந்து 40 ஐந்தாம் தலைமுறை விமானங்களும் 35 ஸ்டெல்த் போர் விமானங்களும் Shaanxi KJ-500 மூன்றாம் தலைமுறை விமானங்களும் வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது மறைமுகமாக இந்தியாவிற்கு சீனா விடுக்கும் மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |