உளவு பார்த்ததாக கனேடியர் மீது சீனா குற்றச்சாட்டு: தீர்ப்பு வழங்கப்படாமல் முடிந்தது விசாரணை
சீனாவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட கனேடியர்களில் ஒருவர் மீதான வழக்கு தீர்ப்பு வழங்கப்படாமலே முடிவடைந்தது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், சீன நிறுவனமான Huawei Technologieயின் தலைமை பொருளாதார அலுவலரான Meng Wanzhou கனடாவால் கைது செய்யப்பட்டார்.
அதற்கு பழிவாங்கும் வகையில் சீனா இரண்டு கனேடியர்களை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்தது.
அவர்களில் ஒருவர் Michael Spavor. இன்று அவர் மீதான வழக்கு விசாரணை துவங்கியது. விசாரணை துவங்கி மூன்றே மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படாமலே விசாரணை முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.