கனடாவில் கனேடியர் கொல்லப்பட்டதன் பின்னணியில் சீனா: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சீனப் பெண்
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ள நிலையில், உண்மையில் அந்த சம்பவத்தின் பின்னால் சீனாதான் உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சீனப் பெண் ஒருவர்.
கனேடியர் கொலையின் பின்னணியில் சீனா
ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிஜ்ஜர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னால் சீனாதான் உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சீனப் பெண் ஒருவர்.
யார் அந்தப் பெண்?
அவரது பெயர் ஜெனிபர் (Jennifer Zeng), அவர் தனியாக ப்ளாக் ஒன்றை நடத்திவருகிறார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்துவரும் ஜெனிபர், சீன மாகாண கவுன்சிலின் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஆவார்.
நிஜ்ஜர் கொலையின் பின்னால் உள்ளது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று கூறியுள்ள ஜெனிபர், இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குவதற்காக சீனா இதைச் செய்ததாக கூறியுள்ளார்.
Exclusive: Today, shocking revelations about the assassination of the #Sikh leader, #HardeepSinghNijjar in #Canada, have emerged from within the #CCP.
— Inconvenient Truths by Jennifer Zeng 曾錚真言 (@jenniferzeng97) October 8, 2023
It is alleged that the assassination was carried out by CCP agents.
The purpose was to frame #India, creating discord between… pic.twitter.com/aweBigR1bf
மேலும், உலகின் கவனத்தை சீனா தைவான் பிரச்சினையிலிருந்து வேறு பக்கம் திசை திருப்புவதற்காகவே, சீனா நிஜ்ஜரைக் கொலை செய்து, பழியை இந்தியா மீது போட்டுள்ளதாகவும் ஜெனிபர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |