சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் தீவில் H-6 குண்டுவீச்சு விமானங்கள்... தயாராகிறதா சீனா
தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளில் சீனா தனது மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சு விமானங்களில் இரண்டை தரையிறக்கியதை செயற்கைக்கோள் படங்களால் அம்பலமாகியுள்ளது.
இதுவே முதல் முறை
இந்த மாதம் நடந்துள்ள இந்த நடவடிக்கையானது, சீனா தனது வளர்ந்து வரும் இராணுவத் திறன்களை எதிரிகளுக்கு அடையாளப்படுத்துவதாக சில நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாராசெல் தீவுகளில் உள்ள வூடி தீவில் நீண்ட தூர H-6 குண்டுவீச்சு விமானங்கள் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். பிலிப்பைன்ஸுடனான பதட்டங்கள், தைவானுக்கு அருகிலுள்ள நடவடிக்கைகள் மற்றும் இந்த வார இறுதியில் பிராந்தியத்தின் மிகப்பெரிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராசெல் தீவுகளில் சீனாவின் நீண்ட தூர H-6 குண்டுவீச்சு விமானங்களை தரையிறக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு சீனாவின் இந்த நகர்வு புரியும் என்றே கூறுகின்றனர்.
விமானம் தாங்கிக் கப்பல்
சிங்கப்பூரில் முன்னெடுக்கப்படும் Shangri-La Dialogue கூட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். சனிக்கிழமை அமெரிக்கா தரப்பு ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் தொடர்பில் பதிவு செய்கிறது.
இதனிடையே, வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த மாதம் தென் சீனக் கடலில் ஒரு பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபரில் தைவானைச் சுற்றியுள்ள போர் நடவடிக்கைகளில் சீனாவின் H-6 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன, ஜூலையில் முதல் முறையாக அமெரிக்க நிலப்பகுதிக்கு அருகில் இந்த விமானங்கள் பறந்தன.
சில இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், H-6 குண்டுவீச்சு விமானங்கள் முதலில் மே 17 ஆம் திகதி அந்த தீவுக்கு வந்து மே 23 வரை இருந்திருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |