ஆயிரம் மடங்கு அதிகரிப்பு... சீனாவின் அறிப்பால் நடுக்கத்தில் உலக நாடுகள்
சீனாவில் கொரோனா தொடர்பான இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, இன்னொரு பெருந்தொற்று நாட்கள் உருவாகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் அச்சம்
சீனாவில் ஒரே மாதத்தில் 60,000 பேர்கள் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளதாக அங்குள்ள சுகாதாரத்துறை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலேயே உலக நாடுகள் இந்த அச்சத்தை எழுப்பியுள்ளது.
@getty
கொரோனா தொடர்பில் கடந்த மூன்றாண்டுகளாக அமுலில் இருந்த கடுமையான விதிகளை சீனா சமீபத்தில் தான் ரத்து செய்தது. பொதுமக்கள் பலர் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்ட பின்னர், எந்த முன்னேற்பாடுகளும் இன்றி கட்டுப்பாடுகளை சீனா நீக்கியது.
இந்த நிலையில், கொரோனா தொடர்பான இறப்புகள் இதுவரை 5,272 என கூறி வந்த சீனா, சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஒரே மாதத்தில் மொத்தம் 60,000 பேர்கள் இறந்துள்ளதாக உறுதி செய்துள்ளது.
இது முன்னர் கூறிவந்த இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1,000 மடங்கு அதிகம் என்றே கூறுகின்றனர். டிசம்பர் 8ம் திகதியில் இருந்து ஜனவரி 12ம் திகதி வரையிலான இறப்பு எண்ணிக்கை 59,958 என சீனா குறிப்பிட்டுள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை
ஆனால் இந்தப் எண்ணிக்கை என்பது சீனாவில் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே எனவும், குடியிருப்புகளில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியானால், பல மடங்காக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
@getty
இருப்பினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்பில் சீனா உண்மையான தரவுகளை வெளியிட மறுப்பதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேலும், சனிக்கிழமை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு வரையில், கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கும் குறைவான இறப்புகள் ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் கூறி வந்துள்ளனர்.