கொரோனா முதல் நோயாளி யார்? சீனாவின் அடுத்த சதி அம்பலம்
கொரோனா பெருந்தொற்று வூஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக சந்தேகம் வலுப்பெற்று வரும் நிலையில், முதல் நோயாளி தொடர்பான அனைத்து தரவுகளையும் சீனா அழித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து மிகப்பெரிய தகவல் வெளியாகும் வாய்ப்பு இதனால் மூடிமறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வூஹான் மாமிச சந்தையில் கண்டறியப்படுவதற்கு முன்னமே, குறித்த கிருமியானது அழிவை ஏற்படுத்த தொடங்கியிருந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்று தொடக்கத்தில் எந்த உருவாக இருந்தது என்பது தொடர்பில் விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளனர்.
அதில், தொடக்க நாட்களில் கொரோனா பரவல் மற்றும் உருவாக்கம் தொடர்பான அனைத்து தரவுகளும் சீனா மொத்தமாக சேதப்படுத்தியுள்ளது.
இருப்பினும், சேதப்படுத்தப்பட்ட தரவுகளை தங்களால் இயன்ற அளவு மீட்டெடுத்து ஆய்வுக்கு உபடுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வூஹான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை நாடினாலே வைரஸ் பரவல் தொடர்பான பல தரவுகளை திரட்டலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.