நிலநடுக்கத்தில் சிக்கி 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்! சீனாவில் நடந்த அதிசயம்

China Earthquake Viral Photos
By Ragavan Sep 22, 2022 05:13 PM GMT
Report

சீனாவில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 93 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பலர் மீட்கப்பட்டாலும், கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் கழித்து உள்ளூர் விவசாயியால் ஒருவர் இப்போது உயிருடன் மீட்கப்பட்டார்.

சீனாவில் பயங்கரமான நிலநடுக்கத்தாள் ஏற்பட்ட நிலச்சரிவில், மண்ணுக்குள் புதையுண்ட தொழிலாளி ஒருவர் 17 நாட்களுக்குப் பிறகு அதிசயமான முறையில் உயிருடன் மீட்கப்பட்டார்.

சீனாவில் இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 93 பேர் உயிரிழந்தனர்.

இந்த இயற்கை நிகழ்வால் ஆயிரக்கணக்கான மக்களை தற்காலிக முகாம்களுக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்துவருகின்றன.

நிலநடுக்கத்தில் சிக்கி 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்! சீனாவில் நடந்த அதிசயம் | China Earthquake Worker Rescued After 17 Days

இதனிடையே, புதன்கிழமையன்று ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. சிச்சுவானில் உள்ள வாண்டோங் நீர்மின் நிலையத்தில், கான் யூ (Gan Yu) எனும் தொழிலாளி மீட்கப்பட்டார். இது ஒரு "வாழ்க்கையின் அதிசயம்" என்று அரசு நடத்தும் சீன தேசிய வானொலி (CNR) விவரித்தது செய்து வெளியிட்டுள்ளது.

தொழிலாளி Gan Yu அருகிலுள்ள கிராமவாசியால் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார், ஆனால் அவர் பயங்கரமாக காயமடைந்தார்.

செப்டம்பர் 5 அன்று, நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​Gan தனது சக பணியாளர் லுவோ யோங்குடன் பணியில் இருந்தார். நிலநடுக்கம் என்று தெரிந்தும், காயமடைந்த சக ஊழியர்களுக்கு முதலுதவி வழங்கவும், அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், இருவரும் அங்கேயே தங்கியிருந்தனர்.

[P4M55UReuters

அவர்கள் சுமார் 20 கிலோமீட்டர்கள் (12 மைல்கள்) பயணம் செய்து தனிமைப்படுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர்.

ஆனால், கடுமையான குறுகிய பார்வை கொண்ட Gan, நிலநடுக்கத்தில் தனது கண்ணாடியை இழந்தார். மேலும் செங்குத்தான நிலப்பரப்பைக் கடப்பது கடினமாக இருக்கும்.

இருவரும் பிரிவதற்கு முன், பாசி மற்றும் மூங்கில் இலைகளால் படுக்கையை உருவாக்க லுவோ Gan-க்கு உதவினார், மேலும் அவருக்கு சில காட்டுப் பழங்கள் மற்றும் மூங்கில் தளிர்கள் சாப்பிட கொடுத்தார்.

ஹெலிகாப்டர் தங்களை கண்டுபிடிக்க அதன் குறியீட்டை வரைய நெருப்பைப் பயன்படுத்தினர்.

பின்னர், செப்டம்பர் 8-ஆம் திகதி லுவோவை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர், ஆனால் செப்டம்பர் 11 அன்று Gan-ன் தற்காலிக தங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போனார்.

நிலநடுக்கத்தில் சிக்கி 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்! சீனாவில் நடந்த அதிசயம் | China Earthquake Worker Rescued After 17 DaysPhoto: Weibo

அவரது ஆடைகள் மற்றும் கால்தடங்களைக் கண்டுபிடித்த பிறகு, Gan தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துபோறயிருப்பார் என்று மீட்புப் பணியாளர்கள் கவலைப்பட்டனர்.

இந்த நிலையில், உள்ளூர் விவசாயி Ni Taigao, இந்த வார தொடக்கத்தில், மின் நிலையம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் உள்ள தனது ஊருக்குத் திரும்பியபோது, ​​Gan தேடப்படுவதைப் பற்றி அறிந்தார்.

புதன்கிழமை காலை, கிராமவாசியான Taigao அந்த பகுதியைப் பற்றிய தனது அறிவைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் சேர்ந்தார். அவர் இரண்டு மணி நேரம் நடைபயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​Gan-ன் பலவீனமான முனகல்களைக் கேட்டு, அவர் சில மரங்களுக்கு அடியில் கிடப்பதை கண்டுபிடித்தார்.

நிலநடுக்கத்தில் சிக்கி 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நபர்! சீனாவில் நடந்த அதிசயம் | China Earthquake Worker Rescued After 17 DaysPhoto: Weibo

பின்னர், அவசர உதவிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, Gan மீட்கப்பட்டார். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு வெளியேற்றப்பட்டார், அங்கு அவருக்கு பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இப்படியொரு சூழலில் உயிரிழந்திருப்பார் என்று கருதப்பட்ட Gan Yu 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US