சீனாவின் ரகசிய அணு விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மலைப்பகுதியில், செயற்கைக்கோள் படங்கள் மூலம் புதிய அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதன்மூலம், சீனா தனது அணு ஆயுத களஞ்சியத்தை வேகமாக விரிவாக்கி வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
சிச்சுவானின் ஜிடோங் மற்றும் பிங்டோங் பகுதிகளில் புதிய பங்கர்கள், பாதுகாப்பு அரண்கள் மற்றும் பிளூட்டோனியம் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிங்டோங் பகுதியில் 360 அடி உயரம் கொண்ட புதிய காற்றோட்டக் குழாய் அமைக்கப்பட்டு, பிளூட்டோனியம் மூலக்கூறு உற்பத்தி நடைபெறுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜிடோங் பகுதியில், உயர் வெடிப்புச் சோதனைகள் நடைபெறக்கூடிய பங்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புத் துறை மதிப்பீட்டின்படி, 2024 இறுதியில் சீனாவிடம் 600-க்கும் மேற்பட்ட அணு அணுவெடியுளைகள் (Warheads) இருந்தன. 2030க்குள் அது 1,000-ஆக அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஆயுத களஞ்சியத்தை விட குறைவாக இருந்தாலும், வளர்ச்சி வேகம் கவலைக்குரியதாக உள்ளது.
சீனாவின் இந்த விரிவாக்கம், உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டு முயற்சிகளை சிக்கலாக்குகிறது. அமெரிக்கா, எதிர்கால ஒப்பந்தங்களில் சீனாவையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், பீஜிங் அதற்கு ஆர்வம் காட்டவில்லை.
சீனா தனது அணு ஆயுதங்களை மேம்படுத்தி, தைவான் போன்ற பிரச்சினைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க முயல்கிறது. இது, எதிர்காலத்தில் பெரிய அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் படங்களில், பிங்டோங் நிலையத்தின் மேல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் “Stay true to the founding cause and always remember our mission” என்கிற முழக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. இது, சீனாவின் அணு விரிவாக்கம் அரசியல் நோக்கத்துடன் நடைபெறுவதை காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China nuclear expansion Sichuan, China new warhead facilities, Zitong Pingtong nuclear sites, #ChinaNuclearExpansion #SichuanWarheads #SatelliteImages #XiJinping