சீனாவில் குரங்கிலிருந்து கிளம்பிய புது வைரஸ்! ஒருவர் பலியானதால் மக்கள் பீதி!
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதிதாக 'குரங்கு பி' என்ற வைரஸ் கிளம்பியுள்ளது, இந்த வைரஸ் தாக்கி ஒருவர் பலியானார்.
கால்நடை மருத்துவர் ஒருவர் 53, இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த மே 27-ஆம் திகதி மரணமடைந்தார். இவரது எச்சில், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'குரங்கு பி' (Monkey B Virus) வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
'குரங்கு பி' வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் மகாக்ஸ் (macaque) வகை குரங்குகளில் 1932-ல் கண்டறியப்பட்டது. இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும். இதில் இறப்பு சதவீதம்(70--80) அதிகம்.
இந்த வைரஸ் பொது மக்களுக்கு பரவும் ஆபத்து மிகக் குறைவு. ஆனால் ஆய்வகத் தொழிலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் விலங்குகளை குறிப்பாக குரங்குகள் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மனிதர்களை 'குரங்கு பி' வைரஸ் தாக்கும் போது 1முதல் 3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். பின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும்.