தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: குகைக்குள் சிக்கித் தவிக்கும் தொழிலாளிகள்
சீனாவின் தங்கச் சுரங்கத்திற்குள் மண் சரிந்ததில் 18 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் குகைக்குள் சிக்கிய 18 பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஜகஸ்தானின் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள யினிங் கவுண்டியில் உள்ள சுரங்கத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த நேரத்தில் மொத்தம் 40 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதயடுத்து,மீட்பு பணியில் 22 சுரங்கத் தொழிலாளர்கள் மேற்பரப்பில் கொண்டு வரப்பட்டனர், ஆனால் 18 பேர் சிக்கியுள்ளனர்.
iStock
மீதமுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.
முன்னதாக..,
கடந்த ஆண்டு செப்டம்பரில், வடமேற்கு மாகாணமான கிங்காயில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நிலத்தடியில் சிக்கித் தவித்த 19 சுரங்கத் தொழிலாளர்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டன.
ஆனால் டிசம்பர் 2021-ல், வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 20 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், அனால் இருவர் இறந்தனர்.