சீனாவில் பயணத்திற்கு தயாராகும் 2 பில்லியன் மக்கள்: உருவாகும் அடுத்த நெருக்கடி
சீனாவில் லூனார் புத்தாண்டு பொது விடுமுறையை முன்னிட்டு 2 பில்லியன் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் உச்சம்
மொத்தம் 40 நாட்கள் முன்னெடுக்கப்படும் இந்த லூனார் புத்தாண்டு கொண்டாட்டங்களில், மக்கள் ஒருபகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் உறவினர்களை சந்திக்கும் பொருட்டு இடம்பெயர்வார்கள்.
@Bloomberg
உலகின் மிகப்பெரிய இடம்பெயர்தல் இதுவெனவே கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா பரவல் உச்சம் பெற்று வருவதால், பயணிகளால் இந்த எண்னிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்றே அச்சம் எழுந்துள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு பயணங்களுக்கான உள்ளூர் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஆண்டு விதிக்கப்படவில்லை. சீனாவின் மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபப்ட்டுள்ள நிலையில், மருத்துவமனைகள் ஸ்தம்பித்துள்ளதுடன், மருந்தகங்களும் பற்றாக்குறையால் வெறிச்சோடி காணப்படுகிறது.
2 பில்லியன் பயணிகள் பயணப்படுவார்கள்
இந்த நிலையில், லூனார் புத்தாண்டு காலத்தின் அந்த 40 நாட்களில் மட்டும் 2 பில்லியன் பயணிகள் பயணப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
@reuters
2019ல் இந்த எண்ணிக்கை 70.3% என பதிவான நிலையில், தற்போது 99.5% என இருக்கும் என தெரிவித்துள்ளனர். அரசாங்கம் தரப்பில் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படாததால் இந்த ஆண்டு லூனார் புத்தாண்டு மிக விமரிசையாக கொண்டாடப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
2020ல் இதுபோன்ற ஒரு லூனார் புத்தாண்டு விடுமுறையில் தான் பயணப்பட்ட சீனர்களால் உலகம் முழுவதும் கொரோனா பரவியதாக ஒரு கருத்தும் உலவுகிறது.
இதனால், 2020 போன்று தற்போதும் ஒரு நெருக்கடி உருவாகுமா என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.